பொருளாதார மந்த நிலையின் காரணமாக பத்தாயிரம் ஊழியர்களை பார்லி பிஸ்கட் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோடி ஆட்சியின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட தவறான பொருளாதார நடவடிக்கைகளால் நாட்டில் தொழில் துறை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்நிலையில் பொருளாதார மந்த நிலை காரணமாகவும் ஜிஎஸ்டி நெருக்கடி காரணமாகவும் பார்லி நிறுவனத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக விரைவில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பார்லே நிறுவன நிர்வாகி மாயங்க் ஷா கூறுகையில் ரூ.5 மற்றும் அதற்குக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பிஸ்கெட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அந்த நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. இதன் காரணமாக எழுந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட 8000 ஆயிரம் முதல் 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதைத் தவிரவேறு வழியில்லாத சூழல் உள்ளோம் என்று கூறி உள்ளார்.
ஜிஎஸ்டி அமலுக்கு பின்னே பிஸ்கெட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்ட என பார்லிஜி பிஸ்கெட் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
இதேபோல் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய விலையை உயர்த்த முடியாத சூழலில் பாக்கெட்டில் உள்ள பிஸ்கெட்களின் எண்ணிக்கையை குறைத்ததாகவும் இதன் காரணமாக நாட்டின் பெரும் விற்பனை சந்தையாக இருந்த ஊரகப்பகுதிகளில் பிஸ்கெட் விற்பனை சரிந்ததாகவும் மேரி பிஸ்கெட் நிறுவனம் கூறி உள்ளது.